தொல்காப்பியத்தில் ’மை’ – பொருட்பன்மை

புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

                ஒட்டு மொழியான தமிழ் மொழியின் சொற்பெருக்கில் ஓரெழுத்தொருமொழி ஒரு கூறாகும். அந்தச் சொல் வேறு இலக்கண வகையில் இயல்வதுண்டு. கை, மை, அல் போல்வன இவண் நோக்கற்பாலன. [வருகை, மை, கோரல் ]. இந் நிலையில் மை என்னும் சொல் பொருட்பன்மையில் தொல்காப்பியத்தில் இயலுமாற்றை எடுத்து -ரைப்பதாக இக் குறிப்புரை அமைகின்றது.

தொல்காப்பியரின் இலக்கணக் கொள்கைகளால் அறிவதோடு, அவரது நடையாலும் தமிழின் இயங்கியலைத் தெளியலாம். கீழ்வருகின்ற நூற்பாக்களை நோக்குக:

            சேயோன்மேய மைவரை உலகமும் ( நூ. 952)

            மையறு சிறப்பின் உயர்ந்தோர் ( நூ.1067)

இவற்றில், முறையே மேகம், குற்றம் ஆகிய தொடர்பற்ற கருத்தில் மை இயல்கின்றது.

   நன்றி: வ. ஜெயதேவன், 2004, தொல்காப்பிய அகராதி, சென்னைப் பல்கலைக்கழகம்.   *********  

Comments