செயலை என்னும் அசோகு: கருத்தாய்வு புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் உயர்தனிச் செம்மொழியான தமிழின் சொற்களஞ்சியம் நுட்பமானது. அதனால் ஒவ்வொரு சொல்லையும் சூழல் நோக்கிக் கருத்தறியவேண்டும். சான்றாக, அடி, கடி, பூ போன்ற சொற்கள் பெயராகவும் வினையாகவும்; மா என்னும் சொல் பெயராகவும் உரியாகவும் பொருட் பன்மையில் இயல்வதைக் கருதலாம். எனவே ஒரு தொடரில் ஒரு சொல் பயிலுமாற்றை நோக்கிக் கருத்தறியலாம். இக் குறிப்புரை * செயலை* என்னும் பெயர்ச்சொல் அசோக மர த்தைச் சுட்டிப் பழந்தமிழில் பயில்வதை எடுத்துரைக்கின்றது. செயல்+ ஐ> செயலைச் செய் என்று தொடராக இக்காலத் தமிழில் ஆளப்படுகின்றது. பழந்தமிழில் செயலை என்னும் பெயர்ச்சொல் அசோக மர த்தைச் சுட்டுகின்றது. திருமுருகாற்றுப்படையின் 207ஆம் அடியில் “ செயலைத் தண் தளிர...
Posts
Showing posts from April, 2026
- Get link
- X
- Other Apps
மன்னை யும் கையறு நிலை யும் ஒப்பாரி யும் புதுச்சேரி குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம் உயிருள்ள எதுவும் இறப்புக்கும் வளர்ச்சிக்கும் இறப்புக்கும் உட்பட்டவை . அதனால் மனித வாழ்க்கை மரணத்தில் முடிவது இயல்பு . இருந்தாலும் சாவை யாரும் விரும்புவதில்லை என்பதோடு உற்றார் , தலைவர் போன்றோர் காலமாகும்போது இரங்கி ஏங்கி அழுவது உண்டு . இன்றைய நிலையில் இறந்தவர் பிணத்தின் அருகில் உறவு சுட்டியும் பெருமை கூறியும் ஒப்பாரி பாடி மகளிர் புலம்புவர் : பாவலர் இரங்கற்பா இயற்றுவர் . நாடகம் , திரைப்படம் போன்ற நிகழ்த்து கலைகளிலும் இவ்வாறான காட்சிகளும் பாக்களும் இடம்பெற்றுப் பார்வையாளர்களை நெகிழ்விக்கின்றன . இது தன்னுணர்ச்சி வெளிப்பாடாக இயலும் . இந்த மரபு உலக இலக்கியங்களில் தொல்பழங் காலத்திலிருந்து தொடர்கின்றது . ஆங்கிலத்தில் ‘ எலிஜி ’ , வடமொழியில் ‘ சோக் கீத் ’ என்றவாறு இது அழைக்கப்படுகின்றது . ...
- Get link
- X
- Other Apps
’ அல்ல கூற்று மொழி ’ ( உடல் மொழி )– எண்ண வெளியீட்டு முறை புதுச்சேரி குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம் அறிவுத் திருக்கோவிலாக / பண்பாட்டுப் பாதுகாவலனாக / மொழித்திறன் மேம்பாட்டுப் பாட நூலாக / விளக்கவியல் ஆய்வுச் சுரங்கமாகத் தொல்காப்பியம் திகழ்கின்றது . தொல்காப்பிய இலக்கண / இலக்கியக் கொள்கைகள் உலக மதிப்பும் பொருத்தப்பாடும் நிறைந்தவை . தொல்காப்பியத்தில் இடம்பெறுகின்ற கலைச்சொற்கள் நுட்பமானவை ; தன்விளக்கமுடையவை , ஒவ்வொரு கலைச்சொல்லையும் சூழலுக்கேற்பக் கருத்துணர்ந்தால் புரிதிறன் வாய்த்து நவில் கொள்கைகள் தெளிவாகும் . அம் முறையில் களவியலில் உடல் மொழியைக் குறிக்கப் பயில்கின்ற ’ அல்ல கூற்று மொழி ’ என்னும் கலைச்சொல்லைக் கருத்து வெளியீட்டு நோக்கில் விளக்குவதாக இக் குறிப்புரை இயல்கின்றது . அகப் பாடல்களின் எண்ண வெளியீட்டு மரபு : குறிக்கோள் பாங்கினவான அகப் பாடல்கள் அனைத்தும் கதைமாந்தர் கூற்றாகவே அமைகின...