Posts

Showing posts from April, 2024
                                                  திருக்குறளில் ‘ பெள் ’ – சூழல் கருத்தாய்வு பேராசிரியர் ப , கொழந்தசாமி , அரசினர் ஆய்வு நிறுவனம் , புதுச்சேரி .   அற இலக்கியமான திருக்குறள் மொழி மற்றும் இலக்கியத் தொழில்நுட்பத்தைச் செவ்வனே கையாண்டு படைக்கப்பட்டுள்ளது . வாழ்வியல் விழுமியங்களை விண்டுரைப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருப்பினும் , இலக்கண / இலக்கியவியல் உத்திகளும் நடையியல் நுட்பங்களும் திருக்குறளில் செறிந்து காணப்படுகின்றன . காலப் பழமையாலும் திருக்குறளின் இலக்கண / தொடர் அமைப்பு நுட்பங்களாலும் சில குறட்பாக்களுக்கு எளிமையாகப் பொருளுணர இயல்வதில்லை . குறட்பாக்களை முறையாகவும் முழுமையாகவும் உணர்ந்துகொண்டால் படைப்பின் பெருமையும் விளம்பப்படுகின்ற விழுமியத்தின் சால்பும் தெளிவாகி , அறநெறியைப் பின்பற்றும் இயல்பார்வம் பிறக்கும் . அதனால் திருக்குறளை முறையாக உணர்ந்துகொள்ள இலக்கண அமைப்புகளின் பொருண்மைத் தகைமையை அறிவது தேவையாகின்றது . குறட்பாக்களின் புரிதிறன...
  Inculcating scientific temperament in youth through TirukuRaL A didactic teaching approach Dr. P. Kolandasamy, HOD ( Tamil) , KMGIPSR, Puducherry .   Youth of India occupies a good number in demography. Future of the country depends upon the knowledge, attitude & skill of the present youth / students. Hence it is the basic concern of the academicians & Government in inculcating a rich aptitude, an optimistic attitude and necessary awareness in the youth/ students. To achieve the youth empowerment and well being, scientific temperament of the youth is imperative. This article explains how scientific temperament in youth may be inculcated through TirukuRaL. TirukuRaL : An introduction :       ‘Tirukkural’ etymologically means the ‘holy couplets,’ i.e. a text having two lines with seven words each in the Tamil poetic ‘kuRaL venba’ metre. It consists of  1330 couplets with 133 chapters each contains 10 couplets.  ...
                                      கொங்கு வழக்கில் கொடி / ஒறம்பரெ முனைவர் ப . கொழந்தசாமி , அரசினர் ஆய்வு நிறுவனம் , புதுச்சேரி . தொல்காப்பிய எச்சவியலின் முதல் நூற்பா , தமிழ் மொழியின் பன்முகத் தன்மையை / வட்டார வழக்கை ,                         இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று                         அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே என்று சொற்பிறப்பியல் நோக்கில் சுட்டுகின்றது . இதனால் பழங்காலத்திலிருந்தே பொதுத் தமிழும் வட்டார வழக்குகளும் இயல்வது தெளிவு . இந்தப் போக்கு இன்று வரை தொடர்ந்து , தமிழின் சொற்களஞ்சியம் விரிவடைந்து , பொருண்மை ஆய்வுக்கு இலக்காகி , வட்டார வழக்குச் சொற்களின் பொருண்மையை அறிவது தேவையாகின்றது . இக் கட்டுரை கொடி என்னும் பழம்பொதுச் சொல் கொ...