வள்ளுவ உணர்ச்சி மேலாண்மை
திருக்குறள் வகுத்த நகை முனைவர் ப. கொழந்தசாமி, புதுச்சேரி. மனித வாழ்க்கையின் மாண்பினை விண்டுரைக்கும் அற இலக்கியமான வள்ளுவம் உணர்ச்சி மேலாண்மையையும் உணரக் கூறியுள்ளது. மனிதச் செயல்பாடுகளில் ஒன்றான நகையையும் அதன் வெளிப்பாட்டு நெறிகளும் முறைப்படி அமைய வலியுறுத்துகிறது. இனிமையாக நகைக்க வேண்டும்; பிறரைப் புண்படுத்துமாறு நகைக்க்க் கூடாது என்றவாறு அறிவுறுத்துகின்றது. இதைத் தொல்காப்பியம் மற்றும் உளவியல் நோக்கில் அணுகுவதாக இந்தக் கட்டுரை அமைகின்றது. தொல்காப்பிய மெய்ப்பாடுகள்: பொருளதிகார மெய்ப்பாட்டியலில் தொல்காப்பியர் இலக்கிய உணர்ச்சிகளுக்கு மெய்ப்பாடுகள் என்று பெயரிட்டு நகை முதலியவற்றைப் பட்டியலிட்டுள்ளார். அவற்றுள் எள்ளல், இளமை, பேதைமை, மடன் என்னும் நான்கு காரணங்களால் நகை தோன்றும் என நிலைக்களன் சுட்டியுள்ளார். அதாவது பெரும்பானமை பிறரிடமும் சிலபோது தன்னிடமும் தொய்வு காணும்போது நகைக்கும் எண்ணம் ஏற்படும் என்பது தொல்காப்பியப் பதிவு. இதனால் நகை நன்மையும் புண்மையும் செய்யும் என்பது அறியப்படுகின்றது. 1 உளவியல் நோக்கு : உள...