தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு ( முனைவர் ப. கொழந்தசாமி, புதுச்சேரி-605 008. பேச: 94863 66572 .) தமிழின் தொன்மையான / தலைமையான இலக்கண நூலாம் தொல்காப்பியத்தில் எழுத்து சொல் ஆகிய அதிகாரங்களில் தமிழ் மொழியின் அமைப்புகளும் அவற்றின் இயங்கு முறையும், பொருளதிகாரத்தில் இலக்கியப் பொருண்மையும் விளக்கவியல் பாங்குடன் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. எழுத்து, சொல் தொடர் ஆகியவற்றின் இலக்கணங்களை விளக்கும்போது மொழிப் பொருண்மைச் செய்திகள் ஆங்காங்கே தொல்காப்பியத்தில் சுட்டப்பட்டுள்ளன. இது குறித்துத் தொல்காப்பிய உரைகளில் காணப்படும் கருத்துகளையும் ஆய்வுக் கட்டுரைகள்/நூல்கள் கூறும் செய்திகளையும் தொகுத்து வகைதொகைப்படுத்தித் தனியான/முழுமையான ஆய்வை மேற்கொண்டால் அது இலக்கண இலக்கியப் புரிதிறனுக்கும் படைப்புக்கும் ஆய்வுக்கும் உறுதுணையாகும். மேலும் தமிழ் மொழிப்பொருண்மைக...
தொல்காப்பிய ஐ - பொருட்பன்மை புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம் விளக்கவியல் இலக்கண நூலான தொல்காப்பியம் நுட்பமாக மொழி இயங்கியலை எடுத்துரைக்கின்றது. நூற்பாக்களில் இடம்பெறுகின்ற சொற்கள் செறிவானவை. அதனால் கொள்கை நோக்கில் ஒவ்வொரு சொல்லின் கருத்தையும் தெளியவேண்டும். இந் நிலையில் ஐ என்னும் சொல்லைப் பலபொருட்சொல்லாகத் தொல்காப்பியம் சுட்டுவதை விளக்குவதாக இக் குறிப்புரை இயல்கின்றது. ஐ – உயிர் நெடில்; இரட்டையுயிர்; கூட்டொலி(54) - உறவுப் பெயர் - அண்ணன் (1087) - ஐந்து என்னும் எண்ணுப்பெயர்/ அடை (1311) - இரண்டாம் வேற்றுமை உருபு (556) - ...
Comments
Post a Comment