தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு ( முனைவர் ப. கொழந்தசாமி, புதுச்சேரி-605 008. பேச: 94863 66572 .) தமிழின் தொன்மையான / தலைமையான இலக்கண நூலாம் தொல்காப்பியத்தில் எழுத்து சொல் ஆகிய அதிகாரங்களில் தமிழ் மொழியின் அமைப்புகளும் அவற்றின் இயங்கு முறையும், பொருளதிகாரத்தில் இலக்கியப் பொருண்மையும் விளக்கவியல் பாங்குடன் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. எழுத்து, சொல் தொடர் ஆகியவற்றின் இலக்கணங்களை விளக்கும்போது மொழிப் பொருண்மைச் செய்திகள் ஆங்காங்கே தொல்காப்பியத்தில் சுட்டப்பட்டுள்ளன. இது குறித்துத் தொல்காப்பிய உரைகளில் காணப்படும் கருத்துகளையும் ஆய்வுக் கட்டுரைகள்/நூல்கள் கூறும் செய்திகளையும் தொகுத்து வகைதொகைப்படுத்தித் தனியான/முழுமையான ஆய்வை மேற்கொண்டால் அது இலக்கண இலக்கியப் புரிதிறனுக்கும் படைப்புக்கும் ஆய்வுக்கும் உறுதுணையாகும். மேலும் தமிழ் மொழிப்பொருண்மைக...
பழந் தமிழில் ’நுனி’- கருத்தாய்வு ப. கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி உயர்தனிச் செம்மொழியான தமிழ் நீண்டு பரந்த வரலாற்றைக் கொண்டது. ஆயினும் பழந் தமிழ் வழக்காற்றை இன்றும் புரிந்துகொள்கின்ற வாய்ப்பும் உள்ளது. அந் நிலையில் ’நுனி ’ என்னும் மரத்தின் முனைப் பகுதியாக அமைகின்ற உறுப்பைக் குறிக்கின்ற ஒன்றன்பால் சினைப் பெயர் தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் ஆகியவற்றில் இயல்கின்ற பான்மையை எடுத்துரைப்பதாக இக் கட்டுரை அமைகின்றது. இதனால் பழந் தமிழ்ச் சொல்லாட்சியையும் அதன் பொருண்மைத் தொடர்ச்சியையும் அறியலாம். நுனி: சொற்பொருள் : முதல், சினை என்று ஓர் உலகப் பொருள் இரண்டு நிலைகளில் வகைப்படுத்திப் பெயரிடப்படுகின்றது. முதல் சினை உறவைத் தொல்காப்பியம் வேற்றுமை இலக்கணத்தில் விளக்குகின்றது. பொருண்மையியலிலும் இது ஆயப்படுகின்றது. சான்றாக, ...
பண்டு – நிலை மாற்றப் பொருண்மை புதுவை குழந்தைசாமி , பஞ்சலிங்கபுரம் தொல்காப்பியம் காலத்தை இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்று மூன்றாகப் பகுக்கின்றது. இது இலக்கண விளக்கம் மட்டுமன்று; வாழ்வியல் விழுமியமும் ஆகும். அதாவது சென்ற கால மேன்மை தொடருமா ? மாறுமா?, மாற்றம் முன்னேற்றமாகுமா? போன்ற எண்ணங்கள் நிலையானவை; அனைவருக்கும் அனைத்திற்கும் பொருந்துபவை. இத்தகைய உலகளாவிய மாற்ற நிலையைக் காஞ்சி த் திணையில் தொல்காப்பியம் சுட்டுகின்றது. முன்னைய நிலையைச் சுட்ட முன்பு, பண்டு போன்ற சொற்கள் வழக்கிலும் செய்யுளிலும் தொன்றுதொட்டு ஆளப்படுகின்றன. இக் குறிப்புரை பண்டு என்னும் சொல்லால் வள்ளுவம் முன்னைய நிலை மாறியதைப் பதிவதை வெளிப்படுத்துகின்றது. காமத்துப்பாலில், பண்டறி யேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் பெண்டகையால் பேரமர்க் கட்டு (1083) நாணொடு நல்லாண்மை பண்டு டையேன் இ...
Comments
Post a Comment