தொல்காப்பிய ஐ - பொருட்பன்மை
புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
விளக்கவியல் இலக்கண நூலான தொல்காப்பியம்
நுட்பமாக மொழி இயங்கியலை எடுத்துரைக்கின்றது. நூற்பாக்களில் இடம்பெறுகின்ற சொற்கள்
செறிவானவை. அதனால் கொள்கை நோக்கில் ஒவ்வொரு சொல்லின் கருத்தையும் தெளியவேண்டும். இந்
நிலையில் ஐ என்னும் சொல்லைப் பலபொருட்சொல்லாகத் தொல்காப்பியம் சுட்டுவதை விளக்குவதாக
இக் குறிப்புரை இயல்கின்றது.
ஐ – உயிர் நெடில்; இரட்டையுயிர்; கூட்டொலி(54)
-
உறவுப்
பெயர் - அண்ணன் (1087)
-
ஐந்து
என்னும் எண்ணுப்பெயர்/ அடை (1311)
-
இரண்டாம்
வேற்றுமை உருபு (556)
-
வியப்புப்
பொருள உரிச்சொல் (869)
-
விகுதி
(708, 1222)
-
சாரியை
(1152)
-
அசைநிலை
(80)
இங்ஙனம் பெயர்,
இடை, உரி என்று பொருட்பன்மையில் ஐ இயலுமாற்றைத் தெளியுமாறே, குறிப்பிட்ட நூற்பாவில்,
விளம்பப்படுகின்ற இலக்கணக் கொள்கைக்கேற்ப ஒவ்வொரு சொல்லின் கருத்தையும் தெளிந்து புரிதிறனைச்
செம்மையாக்கலாம்.
நன்றி: ஜெயதேவன்,வ., 2004, தொல்காப்பிய அகராதி, சென்னைப்
பல்கலைக்கழகம்.
*******
Comments
Post a Comment