திருக்குறளில் பணை / பனை= வள்ளுவத்தை வாழ்வியல் ஆக்க, குறளில் பயில்கின்ற சொற்களின் பொருளை அறிதல் நன்று. ஒப்பொலிச் சொற்களான பணை / பனை ஆகியன முறையே பெருத்த; பெரிய(அளவிடமுடியாத) என்னும் பொருளில் பெயரடைகளாக இயல்கின்றன. நோக்குக: குறட்பாக்கள் 1234 / 104, 133, 1282-
தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு
தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு ( முனைவர் ப. கொழந்தசாமி, புதுச்சேரி-605 008. பேச: 94863 66572 .) தமிழின் தொன்மையான / தலைமையான இலக்கண நூலாம் தொல்காப்பியத்தில் எழுத்து சொல் ஆகிய அதிகாரங்களில் தமிழ் மொழியின் அமைப்புகளும் அவற்றின் இயங்கு முறையும், பொருளதிகாரத்தில் இலக்கியப் பொருண்மையும் விளக்கவியல் பாங்குடன் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. எழுத்து, சொல் தொடர் ஆகியவற்றின் இலக்கணங்களை விளக்கும்போது மொழிப் பொருண்மைச் செய்திகள் ஆங்காங்கே தொல்காப்பியத்தில் சுட்டப்பட்டுள்ளன. இது குறித்துத் தொல்காப்பிய உரைகளில் காணப்படும் கருத்துகளையும் ஆய்வுக் கட்டுரைகள்/நூல்கள் கூறும் செய்திகளையும் தொகுத்து வகைதொகைப்படுத்தித் தனியான/முழுமையான ஆய்வை மேற்கொண்டால் அது இலக்கண இலக்கியப் புரிதிறனுக்கும் படைப்புக்கும் ஆய்வுக்கும் உறுதுணையாகும். மேலும் தமிழ் மொழிப்பொருண்மைக...
Comments
Post a Comment