வள்ளுவஅமை

முனைவர் ப. குழந்தைசாமி, புதுச்சேரி.

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமை
யார்தோள் அஞ்சு பவர் ( 906)

என்னும் குறட்பாவில் எதுகை/ மோனையில் அமை என்னும் சொல் மூங்கில் என்னும் பொருளில், தலைவியின் மூங்கில் போன்ற [ அமை= மூங்கில்; ஆர் = போன்ற] தோள் அமைப்பைக் குறிப்பதாக, ஆளப்பட்டுள்ளதை உரைகளால் அறியலாம். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி   (முதல் மடலம்; முதற்பாகம், . 288 ) அமைக்கு மூங்கில் என்றும் பொருள் சுட்டுகின்றது.   “அமையாரும் வெற்ப “  ( பழமொழி, 232 அடி03 ) முதலிய இலக்கியப் பதிவுகளில் மூங்கில் என்னும் பொருளில் அமை பயின்றுள்ளதை ஒப்பலாம். இதற்கு இணையாக வேயுறு தோளி என்னும் பயில்வும் இவண் உன்னத்தக்கதுஅமை என்னும் சொல் வினைப் பொருளில், அமைந்த (குறள் 118 ) என்றவாறு திருக்குறளில் இயல்வதும் சுட்டத்தக்கதுஇவ்வாறு பெயராகவும் வினையாகவும் பல்பொருட்சொல்லாக அமை இயல்வதைத் தெளிந்தால் கருத்து விளங்கி, பனுவலின் பயன் சிறக்கும்.

 

பயன்பட்டவை

தமிழ் இணையக் கல்விக்கழக இணையதளத் தரவுகள்.

 

 

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு