வள்ளுவம் விண்டுரைக்கின்ற ‘ அரிது’ : சொற்பொருண்மை நோக்கு
முனைவர் ப. கொழந்தசாமி,
அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி
மானுட
மேன்மையை நோக்காகக் கொண்ட வள்ளுவம் வாழ்க்கையின் இயல்பை எடுத்துக்கூறி, இந்த எண்ணம்/
செயல் தக்கது; வளர்ச்சிக்கானது; இனபம் பயப்பதோடு புகழை மிகுவிப்பது என்று ஊக்குவிக்கவும், இது தகாதது; துன்பத்தோடு பழியை ஏற்படுத்தவல்லது என எச்சரிக்கவும்
செய்யும். இந்த வாய்பாட்டில் அரிது என்னும் சொல்லும் திருக்குறளில்
ஆளப்பட்டுள்ளது. அருமை
என்னும் பண்படியாகத் தோன்றிய, அருமையானது ; கடினமானது; இயலாதது என்னும் பொருளுடைய அரிது என்னும்
சொல், அரிதாக இருக்கும் என்ற பொருளுடைய குறிப்பு வினையாகவும்;
அருமையானது என்னும் பொருளுடைய குறிப்பு வினையாலணையும்பெயராகவும்; அரிதாக
என்னும் பொருளுடைய குறிப்பு முற்றெச்சமாகவும் திருக்குறளில் இயல்வதை எடுத்துரைப்பதாக,
சொல்லின் சூழல் பொருளை, இலக்கணக் குறிப்புடன் அறிந்தால்
விழுமியம் தெளிவாகும் என்கின்ற கருதுகோளில் இக் கட்டுரை அமைகின்றது. வள்ளுவத்தில்,
07,
08, 16, 29, 101, 177, 213, 227, 235, 248, 377, 419, 443, 499, 503, 606, 647,
693, 745, 762, 823, 843, 886, 1049, 1153, 1155, 1156, 1180 ஆகிய குறட்பாக்களில்
அருமையானது / இயலாது என்னும் பொருளிலும், 1160ஆம் குறட்பாவில் அருமையானது என்றும், 1276ஆம் குறளில்
அரிதான என்னும் பொருளிலும் ’அரிது‘ பயில்கின்றது. இதைப் பின்வருமாறு
அட்டவணைப்படுத்தலாம்.
|
குறளெண் |
சொல்லாட்சி |
கருத்து |
சொல்
வகை |
|
07 |
மனக்கவலை
மாற்றல் அரிது |
இறை நினைவு இல்லாவிட்டால்
மனக் கவலை தீர்க்க இயலாது |
குறிப்பு
வினை |
|
08 |
பிறவாழி நீந்தல் அரிது |
இறை நினைவு இல்லாவிட்டால்
பிறவித் துன்பத்தைத் தொலைக்க இயலாது |
குறிப்பு
வினை |
|
16 |
பசும்புல் தலைகாண்பு அரிது |
புல் முளைக்காது |
குறிப்பு
வினை |
|
29 |
வெகுளி கணமேயும் காத்தல் அரிது. |
சினத்தை ந்ண்ட்டிக்க இயலாது |
குறிப்பு
வினை |
|
101 |
ஆற்றல் அரிது |
ஈடு ஆகமுடியாது |
குறிப்பு
வினை |
|
177 |
மாண்டற் கரிதாம் பயன் |
நல்லதாக அமையாது |
குறிப்பு
வினை |
|
213 |
பெறலரிதே |
பெற முடியாது |
குறிப்பு
வினை |
|
227 |
பிணி தீண்டல் அரிது |
நோய் தீண்டாது |
குறிப்பு
வினை |
|
235 |
வித்தகர்க்கு அல்லால் அரிது |
மற்றவர்க்கு இல்லை |
குறிப்பு
வினை |
|
248 |
ஆதல் அரிது |
ஆக இயலாது |
குறிப்பு
வினை |
|
377 |
துய்த்தல் அரிது |
நுகர இயலாது |
குறிப்பு வினை |
|
419 |
வாயினராதல் அரிது |
இருக்க இயலாது |
குறிப்பு வினை |
|
443 |
அரிதே |
இயலாதது |
குறிப்பு வினை |
|
499 |
ஒட்டல் அரிது |
எளிதானது அன்று |
குறிப்பு வினை |
|
503 |
இன்மை அரிதே |
இல்லாதிருப்பது
அருமை |
குறிப்பு வினை |
|
606 |
பயன் எய்தல் அரிது |
பயனை அடைய முடியாது. |
குறிப்பு வினை |
|
647 |
வெல்லல் யார்க்கும் அரிது |
எவராலும்
வெல்ல முடியாது |
குறிப்பு வினை |
|
693 |
தேற்றுதல் யார்க்கும் அரிது |
தெளிவித்தல்
எவர்க்கும் முடியாதது. |
குறிப்பு வினை |
|
745 |
கொளற்கரியதாய் |
கைப்பற்ற
முடியாததாக |
குறிப்பு வினை |
|
762 |
தொல்படைக் கல்லால் அரிது |
வேறுபடைக்கு
இருக்க முடியாது |
குறிப்பு வினை |
|
823 |
மாணார்க் கரிது |
மாட்சியடையாதவர்க்கு
இல்லை. |
குறிப்பு வினை |
|
843 |
செய்தல் அரிது |
செய்யமுடியாது |
குறிப்பு வினை |
|
886 |
ஒன்றல் அரிது |
ஒருபோதும்
முடியாது |
குறிப்பு வினை |
|
1049 |
கண்பாடு அரிது |
தூங்க இயலாது |
குறிப்பு வினை |
|
1153 |
அரிதரோ தேற்றம் |
தெளிய இயலாது |
குறிப்பு வினை |
|
1155 |
அரிதால் புணர்வு |
கூடுதல்
எளிதல்ல |
குறிப்பு வினை |
|
1156 |
அரிதவர் |
அன்பு
செய்வார் என்னும் ஆசை பயனற்றது |
குறிப்பு
வினை |
|
1160 |
அரிதாற்றி |
அரியவற்றைச் செய்து |
குறிப்பு
வினையாலணையும்பெயர் |
|
1180 |
ஊரார்க்கு அரிதன்றால் |
ஊரார்க்குக்
கடினமன்று |
குறிப்பு
வினை |
|
1276 |
அரிதாற்றி |
அரிதாகிய
பிரிவை |
முற்றெச்சம் |
அரிது
என்னும் சொல்லால் விண்டுரைக்கலாகின்ற அடிப்படை விழுமியங்கள்:
Ø இறை நினைவு நன்மையாக்கும்.
Ø உலக வளமைக்கு மழை தேவை
Ø சினம் நீடிக்கக்கூடாது
Ø உதவியைப் பெரிதாகப் போற்றுக
Ø பிறிரின் பொருளை விரும்பக்கூடாது
Ø பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புக
Ø புகழ் வாழ்வு வாழ்க
Ø இரக்கம் கொள்
Ø ஆன்றோர் அறவுரை போற்று
Ø பெரியோரைப் போற்றி நட்பாகக்
கொள்
Ø கற்றோர்க்கும் அறியாமை இருக்கும்
Ø சோம்பல் முன்னேற்றத்தைக் குறைக்கும்
Ø திறனாளனை வெல்ல இயலாது
Ø தலைவன் தன்னை ஐயுறாவண்ணம் நடக்கவும்
Ø அரண் வலிமையும் வளமும் உடையதாக
இருக்கவேண்டும்
Ø தோல்வியால் துவலக்கூடாது
Ø படிப்பு பண்பாட்டை வளர்க்கவேண்டும்
Ø அறிவற்றோர் தமக்குத் தாமே தீங்குசெய்வர்
Ø உட்பகை தீது
Ø இல்லாமை கொடுமையானது
Ø கணவர் பிரிவு துன்பமானது
Ø உடல்மொழியின்/ மெய்ப்பாட்டின் கருத்தறிக
இவ்வாறாக, அரிது என்னும்
வினைச்சொல்லால் வள்ளுவம் வாழ்வியல் விழுமியங்களை விண்டுரைத்துள்ளது. இவ்வாறே, திருக்குறளில் இயல்கின்ற அறவியல் சொற்களை நோக்கினால்
மனவளம் பெருகும்; மானுடம் வெல்லும்.
பயன்பட்டவை
தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம்
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, முதன் மடலம்-
முதற்பாகம், தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம்.
********
Comments
Post a Comment