திருக்குறள் சுட்டும் துலை: சொற்பொருண்மை
ப.கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி.
திருக்குறளின் மொழியமைப்பும் சொல்லாட்சியும் சீரியன;
சிறப்பின. அதனால் வள்ளுவத்தில் பயில்கின்ற ஒவ்வோர்
உருபனையும் கூர்ந்துநோக்கிக் கருத்தறிந்து, பனுவலின் விழுமியத்தைத்
தெளியலாம். காட்டாக, துலை என்னும் அரிய சொல்லைக் கருதலாம்.
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல் ( 986 )
என்னும் குறட்பாவில், துலை என்னும் அரிதான பண்புப்பெயர் இயல்கின்றது. இதற்கு இணை /ஒப்பு என்று பொருள். தனக்கு எந் நிலையிலும் இணையாகாத ஒருவரிடமும் தோல்வியை ஒப்புக்கொள்க என்னும்
அறம் இங்கு எடுத்துரைக்கப்படுகின்றது.
துலை = துலாம் இராசி, கிணற்றிலிருந்து இறைக்கும் நீர்
தங்குமிடம், தராசு, நூறு பலம் கொண்ட நிறை
ஆகிய பொருளுடையது. இவற்றுள் ஒப்பு என்னும் பொருளில் துலை
வள்ளுவரால் ஆளப்பட்டுள்ளது.
பயன்பட்டவை
வலைத்தமிழ் மின் அகராதி https://www.valaitamil.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88--tamil-dictionary98425.html
இணையதளத் தரவுகள்
*********
Comments
Post a Comment