தொல்காப்பிய ‘காட்சி’ : ஒப்புருப் பொருண்மை
ப.கொழந்தசாமி, அரசினர்
ஆய்வு நிறுவனம், புதுச்சேரி
தமிழ் மொழி ஒட்டுமொழிப்
பண்பும் சொல் வளமும் கொண்டது. அதனால் ஒரு வேர்ச்சொல்லைப் பலவாறு
இணைத்து வெவ்வேறான சொற்களை ஆக்கலாம். காட்டாக, பகல் என்பதை நேரம் ; பிரித்தல் என்று ஆளலாம்:
மிதிவண்டி, தொலைபேசி என்று கட்டலாம்.. இந்தப் பண்பைப் படைப்பாளர்கள் செவ்வனே பயன்படுத்திப் புலமை ஆற்றலையும் மொழித்
திறனையும் வெளிப்படுத்கின்றனர். மொழியமைப்பை விளக்குகின்ற தொல்காப்பியரின்
மொழிநடையும் இத்தகையதே. அந் நிலையில் காட்சி [காண் + சி ]என்னும் தொழிற்பெயர்
தொல்காப்பியத்தில் ஒப்புருச் சொல்லாக [ ஒரே இலக்கண வகையைச் சார்ந்த வேறுபட்ட கருத்துடைய சொற்கள் ]
இயலுமாற்றை விளக்குவதாக இக் குறிப்புரை இயல்கின்றது.
காட்சி :
காண்+சி [ பார்த்தல் என்னும் தொழில் ] ஆகிய
இரண்டு பொருண்மைக் கூறுகளைக் கொண்ட, பிரிந்தியலக்கூடிய
[பகுபதம்] கூட்டுச் சொல்லாக, பெயராக அமைகின்றது. இது தொல்காப்பியத்தில்,
வெட்சியின் துறையாக ‘ தேடுதல்’ – காட்சி , கல்கோள்… (நூற்பா
1010)
ஆற்றுப்படையில் ’காணல்’ – ஆற்றிடைக் காட்சி… … (நூற்பா 1040)
களவியலில் ’ தெளிவு’ – செயிர்தீர் காட்சி.. …
(நூற்பா 1063 )
மரபியலில் ‘ பெயர்’
– கலை என் காட்சி .. … (நூற்பா
1548 )
மரபியலில் ‘ நுண்ணறிவு’
– ஒத்த காட்சி….. (நூற்பா 1614 )
என்றவாறு
பெயராக, வேறுபட்ட கருத்தில் இயல்கின்றது. அதாவது ஓருருவில் அமைந்த பெயர்ச் சொற்களாக
அமைந்துள்ளன.
இத்தகைய மயக்குகின்ற பொருட்பனமையால்
ஏற்படும் குழப்பத்தைச் சூழற்பொருண்மை அடிப்படையில் எதிர்கொண்டு, தெளியலாம்.
பயன்பட்டது
ஜெயதேவன்,வ. (பதி.) 2004. தொல்காப்பிய அகராதி,
சென்னைப் பல்கலைக்கழகம்
******
Comments
Post a Comment