தொல்காப்பியத்தில் அயர்தல் / அயர்த்தல் :  நுண் பொருண்மை

ப. கொழந்தசாமி, அரசினர் ஆய்வு நிறுவனம், புதுச்சேரி

மக்களின் கருத்துப் பரிமாற்றக் கருவியாகப் பயன்படுவது மொழியாகும். இதற்காக ஒவ்வொரு மொழியிலும் எழுத்து, சொல், தொடர் என்னும் அலகுகள் உள்ளன; இவை ஒவ்வொன்றிற்கும் குறிப்பிட்ட பொருண்மை இயக்கம் உள்ளது. அவற்றை,

            எழுத்துக்குச் சொற்பொருளை ஆக்கும் / வேறுபடுத்தும் ஆற்றல் உண்டு

சொல்லுக்குப் பொருள் குறிக்கின்ற / சுட்டுகின்ற வல்லமை உள்ளது.

தொடர் ஒரு சொல்லின் பொருண்மையை வரையறுத்துக் கருத்துரைக்கும்

என்றவாறு தெளியலாம். இதனைத் தொல்காப்பியத்தில் பயில்கின்ற,  அயர்தல் / அயர்த்தல் என்னும், குறைந்த ஒலி வேறுபாடுடைய இணைச் சொற்களால்  உறுதிப்படுத்தலாம்.

            வெறியாட்டு அயர்ந்த காந்தள்… ( நூற்பா 1010 )

என்னும் நூற்பாவில் செய்தல் என்று உடன்பாட்டில் செயப்படுபொருள்குன்றா வினை அடியாகத் தோன்றிய, பெயரடையாக நடத்திய என்னும் கருத்தில் அயர்தல் இயல்கின்றது. ஆனால், 1051;17 , 1061;6 ஆகிய நூற்பாகளின் அடிகளில்  ””அயர்ப்பின்” என்று ’செய்முறை அறியாமை’, ’செயலைத் தவிர்த்தல்’ என்று எதிர்மறைப் பொருளில் பயில்கின்றது.  அயர்ந்த என்னும் சொல்லின் மெல்லொலியை [ந்],  அயர்த்த என்று வல்லொலியாக [த்] மாற்றுவதால் சொற்பொருள் வேறாகின்றது.

இவ்வாறு நுண் நிலையிலும் பொருள் மாற்றம் நிகழ்வதை அறிந்து சொற்களைப் புரிந்துகொண்டால் புலப்பாடு சிறக்கும்.

                              பயன்பட்டது

       ஜெயதேவன், வ. (பதி.) 2004, தொல்காப்பிய அகராதி,  சென்னைப் பல்கலைக்கழகம்.

                                                   *******

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு