பேராசிரியர் குழந்தைசாமி, புதுச்சேரி
திருக்குறள் மானுட மேன்மைக்கான
கொள்கை வரைவாகத் திகழ்கின்றது. இதில் செய்யத்தக்கவை /
தகாதவை ஆகியன உடன்பாட்டு முறையிலும் எதிர்மறையாகவும் விண்டுரைக்கப்படுகின்றன.
அவற்றுள் மனித மாண்பிற்குத் தேவையான / அடிப்படையான
விழுமியமாக இயல்வது ’ஒழுக்கு’ ஆகும். ஒழுக்கம், நெறி ஆகியன இதனோடு ஒத்த பொருளுடையன.
ஒழுகு என்பதன் திரிபான, நடத்தையியல் கலைச்சொல்லான ’ஒழுக்கு’ என்னும் பெயர்ச்சொல்லுக்கு ’நெறிபிறழா நன்னடத்தை’ என்று பொருள் கொள்ளலாம்.
கொண்ட கொள்கையில் / அறநெறியில் பிறழாமல்,
உறுதியுடன் எப்போதும் நிற்றலை இது சுட்டுகின்றது.
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு (20)
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு (148 )
ஒழுக்குஆறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு ( 161 )
ஆகிய குறட்பாக்களில் ’ஒழுக்கு’ இப்
பொருளில் பயில்கின்றது.
ஒருவன் அனைத்துச் சூழலிலும் ’நெறிபிறழா நன்னடத்தை’
கொண்டவனாக வாழ்தலை இது வலியுறுத்துகின்றது. இத்தகைய பண்புகள்/ உறுதிப்பாடு ஒருவனை ஐயனாக உயர்த்தவல்லன.
இதுவே வள்ளுவம் சாதிக்க விழைவதாகும்.
பயன்பட்டது
https://www.ytamizh.com/thirukural
*****
Comments
Post a Comment