புறநானூற்றின் அடிப்படையில் ‘வரிசை’ வகுக்கின்ற வள்ளுவம்
புதுவை
குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
அறத்துப்பாலில் தனிமனித அறங்களையும் பொருட்பாலில்
சமூக, அரசியல், பொது வாழ்வியல் நெறிகளையும் வகுத்துரைக்கின்ற வள்ளுவம்,
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ; சிறப்பொவ்வா
செய்தொழில்
வேற்றுமை யான்(972)
என்று அனைவரும்
இணையானோர்; திறன் அடிப்படையில் வேறுபாடு இருக்கலாம் என்று சுட்டி, இதை வழிமொழிவதாக,
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி
வாழ்வார் பலர் (528)
என்னும் குறளை
அமைத்துள்ளார். அனைவரையும் ஒரே நிலையில் பார்க்காதே ; தகுதியறிந்து மதிக்க; பாராட்டுக
என்பது அரசியல் விழுமியமாகும். சுற்றம் காக்கவேண்டிய ஆட்சித் தலைமை, அரசுப் பணியாளரின்
அறிவுத் திறன், ஆளுமைச் சீர்மை, கடமையுணர்வு, பங்களிப்பு ஆகியவற்றைப் போற்றி விருதளித்து
ஊக்கலாம். இதனால் அரசனைச் சுற்றிலும் திறனாளர் சூழ்ந்திருப்பர்; அரசுப் பணிகள் செம்மையாக
இயலும். இங்கு வரிசை என்பது
தகுதி / திறமைக்கேற்ற மதிப்பு என்னும் பொருளில் பயில்கின்றது. அன்றைய முடியரசனுக்கு வகுத்த இவ் அறநெறி இன்றைய
குடியாட்சி முறையிலும் பின்பற்றப்படுகின்றது. இக் குறட்பாவில்,
|
ஒரு திசை ஒருவனை உள்ளி, நாற்றிசைப் |
5 |
|
பொது நோக்கு ஒழிமதி, புலவர் மாட்டே! (பா121) |
என்னும் புறநானூற்றின்
தாக்கம் காணப்படுகின்றது. மேலும் பழங்காலத்திலிருந்தே
அரசியல் கொள்கைகள் தமிழகத்தில் நிலவி வந்ததும் தெளிவாகின்றது.
நன்றி: இணையத்
தரவுகள். ******
Comments
Post a Comment