தகைமாண்ட தக்கார் யார் ?

புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

                உலகில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் இணையானோர். ஆனால் பண்பில் / திறனில் வேறுபடுவர். ஒருவர் அனைத்து அடிப்படைப் பண்புகளிலும் அறவோனாக விளங்கினால் / எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தால் / நல்லெண்ணங்களை வாய்ப்பாக்கினால்; மண்ணில் நல்லவண்ணம் வாழ்ந்தால் அவரைத் தகைமாண்ட தக்கார் என்று வள்ளுவம் அடையாளப்படுத்துகின்றது. அடுத்து, இத்தகைய பெருமை சான்ற ஆன்றோர் சினக்கும்படி செயலாற்றலாகாது என்று அறிவுறுத்துகின்றது. ஆன்றோர் வெகுளார்; கொடுஞ்செயல் புரிந்தால் மட்டுமே அவர்கள் சினப்பர்: ஆயினும் அதனால் பெரும்பொருளும் பேரழிவுறும் என்பதை,

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார்
செறின் ( 897)

என்னும் குறட்பாவில் எச்சரிக்கின்றார்.  இதில், , “என்ன ஆகும் ?” [ என்னாம்? ]என்று வினவி, இவ் வினா மூலம் ,பேரழிவு ஏற்படும் என்பதை உறுதிப்படுத்துகின்றார். இந்தக் குறட்பாவால்,

v ஒருவன் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தகைமாண்ட தக்காராகச் சிறக்கலாம். இத்தகையோர் பிறழ் உணச்சிகளுக்கு இடந்தரலாகாது.

v சான்றோர் வெறுப்புக்கு உள்ளானால் சிறந்த செல்வ வாழ்க்கையும்  மிகு பொருளும் அழியும்.

இங்ஙனம் ஒவ்வொரு சொல்லிலும் வள்ளுவம் விழுமியத்தைப் புதைத்து வைத்து, மேன்மையான வாழ்க்கைக்கு வழிவகுக்கின்றது.

நன்றி: இணையத் தரவுகள்                        ********

 

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு