திருக்குறள் சுட்டுகின்ற தவறு’கள்

புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

அற இலக்கியமான வள்ளுவம் மனித எண்ணங்களையும் செயல்பாட்டினையும் கூர்ந்துநோக்கிப் புல்லுக [கற்க] ; தள்ளுக [பொய்யற்க] என்னும் வாய்பாட்டிலும் உடைமை [ ஊக்கமுடைமை ] ; ஆமை [ கொல்லாமை]  என்னும் பின்னொட்டுகளாலும் அறக் கொள்கைகளை வகுத்துரைக்கின்றது. உடன்பாட்டில் அறையப்பட்டவற்றை வளர்த்தும், எதிர்மறையில் குறிக்கப்பட்டவற்றை விலக்கியும் வாழ்ந்தால் அனைவரும் சிறக்கலாம். இம் முறையில் வள்ளுவம் சிலவற்றைத் தவறு என்று சுட்டுகின்றது. பழந்தமிழ்ப் பல்பொருட் பெயர்ச்சொல்லான ’தவறு’ வள்ளுவத்தில் பயில்வதைக் கீழ்வருகின்ற அட்டவணையால் அறியலாம்:

குறள் எண்

சொல்லாட்சி

கருத்து

469

தவுறு

பிழை

1154

தவறு

குற்றம்

1286

தவறு

பிழை

1321

தவறு

குற்றம்

1325

தவறு

குற்றம்

 

இவற்றுள்  பொருட்பாலில் 469ஆம் குறட்பாவில் மட்டும்/  காமத்துப்பாலில் மேற்படி நான்கு குறட்பாக்களில் ஐந்து முறையும் ‘தவறு’ இயல்கின்றது.  தனிமனித ஆளுமையை வலியுறுத்துகின்ற அறத்துப்பாலில், ஒருவனைக் குறிப்பிட்டு இக் கருத்து இயலவில்லை. இவற்றால் அறிவுறுத்தப்படுகின்ற அறச் செயல்கள்:

v  பயனாளியின் பண்பறிந்து நன்மைபுரிக.

v  அன்புரையை நம்பவேண்டும்

v  தலைவனை நேரில் காணும்போது தவறு தெரிவதில்லை

v  தவறுக்காக அல்லாமல் அன்பின் மிகுதியால் தலைவி ஊடுவாள்

v  பிரிவு ஏக்கத்தைத் தரும்

இவற்றுள் மனிதர்களின் பன்முகத் தன்மையை / புரிதிறன் ஆற்றலை 469ஆம் குறட்பா அடையாளப்படுத்துகின்றது. காமத்துப்பாலிலுள்ளவை அன்புப் பிணைப்பையும் பிரிவின் கொடுமையையும் சுட்டுகின்றன. இங்ஙனம் வள்ளுவத்தில் பயில்கின்ற ஒவ்வொரு சொல்லும் அறவியல் கலைச்சொல்லாக/ நுட்பமானதாக அமைந்துள்ளதால் பயில் / தொடர்ச் சூழல் கருதித் தெளிந்தால், விழுமியத்தை விளங்கிக் கொள்வதோடு திருவள்ளுவரின் படைப்பாற்றலையும் அறியலாம்.

நன்றி: இணையத் தரவுகள்                              *****

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு