திருக்குறளில் ‘என்ன’ – கருத்தாய்வு
புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
இலக்கியத்தில் பயில்கின்ற
ஒவ்வொரு சொல்லும் மதிப்புமிக்கவை; கருத்துப் பொதிந்தவை.
அதிலும் அற இலக்கியச் சொல்லாடல் நோக்கித் தெளியத்தக்கது. இந் நிலையில் ‘என்ன’ என்னும்
சொல் வள்ளுவத்தில் பலபொருட்சொல்லாக இயல்வதை எடுத்துரைப்பதாக இக் குறிப்புரை அமைகின்றது.
|
குறட்பா எண் |
சொல்லாட்சி |
கருத்து |
|
144 |
என்னாம்
[என்ன+ஆகும் ] |
வினா மூலம் வற்புறுத்தல்
|
|
705 |
என்ன |
ஒன்றுமில்லை என உறுதிப்படுத்தல் |
|
987 |
என்ன |
வினா மூலம் வற்புறுத்தல் |
|
1100 |
என்ன |
ஒன்றுமில்லை எனஉறுதிப்படுத்தல் |
|
1122 |
என்ன |
அதைப் போன்றது என்று உவமித்தல் |
இவ் அட்டவணையால் வினாவாகவும்
உவம உருபாகவும் என்ன பயில்வதையும் வினாவழியே வற்புறுத்தல்,
உறுதிப்படுத்தல் ஆகிய கருத்தாக்கங்களை வள்ளுவம் விண்டுரைப்பதையும்,
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு
எம்மிடை நட்பு ( 1122 )
என்னும் குறட்பாவில் பொருத்தமான உவமையினால்
காதல் ஈர்ப்பை என்ன மூலம் வெளிப்படுத்துவதையும்
தெளியலாம். இவ்வாறு வள்ளுவச் சொல்லாட்சி நுட்பமானதாக
அமைந்துள்ளது.
நன்றி: இணையச்
செய்திகள் -------------
Comments
Post a Comment