ஒப்புரவாளனே உயிர் வாழ்வான் – சமூக நல்லிணக்கப் பொருண்மை

புதுவை குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்

அற இலக்கியங்கள் மானுட மேன்மைக்கான கொள்கை வரைவுகளை விண்டு ரைக்கின்றன. அவற்றுள் சமூக நல்லிணக்கமும் ஒன்றாகும். கூடி வாழ விரும்புகின்ற விலங்காகிய மனிதன் இனிமையாக / வளமாக வாழப் பிற மனிதர்/ உயிரினங்களின் உறுதுணை இன்றியமையாதது. அதனால் ஒருவருக்கொருவர் உதவியும் உணர்வுகளை மதித்தும் இணங்கி வாழவேண்டும். ஊருக்குள் இருக்கின்ற நன்னீர்க் கிணறாகவும் மருத்துவப் பயனுடைய மரமாகவும் ஒவ்வொருவரும் பயன்படவேண்டும். இன்சொல், இணக்கம், உதவி, அறங்களை/ உணர்வுகளை மதித்து நடத்தல் ஆகிய பண்புகளைச் செயல்படுத்துபவர் ஒப்புரவாளர் [empathetic person] எனப்படுகின்றார். வள்ளுவம் இத்தகைய பண்பாளராக ஒவ்வொருவரும் இயல்பாக உலக நன்மை வாய்க்க இயங்கவேண்டும் என்று ஒப்புரவறிதல் அதிகாரத்தில் வலியுறுத்துகின்றது. இதை’’ஒப்புரவு ஒழுகு’ என்று அவ்வையின் ஆத்திசூடியும் வழிமொழிகின்றது. வள்ளலார் உயிரிரக்கத்தை வலியுறுத்தியதை இவண் கருதலாம்.

நன்றி: இணையத் தரவுகள்                       *******

Comments

Popular posts from this blog

தற்காலப் பொருண்மையியல் ஆய்வுக்குத் தொல்காப்பியத்தின் கருத்தளிப்பு