தொல்காப்பிய ஆ – பொருட்பன்மை
புதுச்சேரி குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
உயர்தனிச் செம்மொழியான தமிழ் சொற்களஞ்சியப்
பெருக்குடையது. பழந்தமிழ் மொழிக் கூறுகள் மாற்றமின்றி இன்றும் வழக்கிலுள்ளன. அவற்றுள்
பொருட்பன்மை கொண்ட ஆ என்பதும் அடங்கும். தொல்காப்பியத்தில் ஆ,
-
நெட்டுயிர்
( நூற்பா, 04)
-
கால்நடை
(1003)
-
சுட்டு
[ அவ்>ஆ] (17 )
-
வினா
(32)
-
பெயரடை
( 42 )
-
பெயர்
விகுதி ( 181 )
-
விளியீறு
( 615 )
போன்ற பொருண்மையியல் இயல்கின்றது. இவ்வாறு வழங்குபவற்றை நோக்கித் தெளிந்தால்
இலக்கணக் கொள்கை புரியலாகும். தொல்காப்பியம் வகுத்துரைக்கின்ற இலக்கணக் கொள்கைகளோடு
அதன் சொல் வழக்கும் தமிழின் மொழிப் பொருண்மையை அறிய வாய்க்கின்றது.
நன்றி
: இணையத் தரவுகள் ******
Comments
Post a Comment