வள்ளுவத்தில் ‘ அன்று ‘ – கருத்தாய்வு
புதுச்சேரி
குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
உயர்தனிச் செம்மொழியான தமிழின் சொற்களம்
விரிவும் நுட்பமும் கொண்டது. அதனால் முழுத் தொடரில் அமைத்துச் சொற்களின் கருத்தைச்
சூழலுக்கேற்பத்
தெளியவேண்டும். ஒவ்வொரு சொல்லும் பொருள் குறிப்பன; ஆயினும் அது தொடரில் உறுப்பாகும்போது
கருத்து அறியப்படும். காட்டாக ஐ, பிடி
போன்ற
சொற்களைக் கருதலாம். அம் முறையில் அன்று என்னும்
சொல் , சூழலுக்கேற்ப
உறழ் பொருள் பயப்பதை எடுத்துரைப்பதாக இக் குறிப்புரை இயல்கின்றது.
அன்றுஅறிவாம் என்னாது அறஞ்செய்க; மற்றது
பொன்றுங்கால்
பொன்றாத் துணை ( 36)
என்னும் குறட்பாவில்
குறிப்பிட்ட / பின் நாளில் என்னும் பொருளில், இன்று போலுமாறு ஒன்றன்பால்
காலப் பெயராக இச் சொல் அமைகின்றது. அடுத்து,
நன்றி மறப்பது நன்றுஅன்று ; நன்றல்லது
அன்றே
மறப்பது நன்று (108)
என்னும் குறட்பாவில்
அன்று என்னும் சொல், அல்ல என்கின்ற பொருளில் ஒன்றன்பால் குறிப்பு வினைமுற்றாகவும்,
அப்போதே என்னும் பொருளில் பெயராகவும் இயல்கின்றது.
இங்ஙனம் ஒரு சொல் ஒலி/ வரி வடிவ மாற்றமின்றி,
மாறுபட்ட கருத்தில் பலபொருட்சொல்லாய்ப் பயில்வது மொழியில் இயல்பானது; சூழல் கருத்தறிந்து
தெளிவது பயனாளர் கடமையாகும். இவ்வாறு கருத்தைத் தெளியின் இலக்கியப் பயன் வாய்க்கும்.
நன்றி : ஈனையத் தரவுகள் ******
Comments
Post a Comment