இதை – சங்கச் சொற்பொருண்மை
புதுச்சேரி
குழந்தைசாமி, பஞ்சலிங்கபுரம்
இலக்கியங்களில்
பல துறைச் செய்திகள் புதைந்திருப்பதால் இவற்றின் ஆய்வுக் களங்களும் விரிந்து பரந்து
பொருண்மையியல் / அகராதிச் சொல் அறிதல் வாய்ப்புகளும் உள்ளன. அவ் வகையில் இதை
என்னும் ஒன்றன்பால் பெயர்ச்சொல்லை அணுகலாம். இது+ ஐ > இதை, இதனை என்றாகின்றது. ஆனால்
, சங்க இலக்கியங்களான மதுரைக்காஞ்சி, பரிபாடல், அகநானூறு ஆகியவற்றில் மரக்கலப் பாய்,
கொல்லை என்னும் கருத்தில் தனிப் பெயர்ச்சொல்லாக இச் சொல் இயல்வதை இக் குறிப்புரை விளக்குகின்றது.
சான்று:
நெடுங்கொடி
மிசை இதை
எடுத்து
( மதுரைக்காஞ்சி, அடி 79 )
என்னும் அடியில் மரக்கலப் பாய் என்னும் கருத்தில்
இயல்கின்றது. இவ்வாறே மதுரைக்காஞ்சி 376, 536 ஆகிய அடிகளிலும், பரிபாடல் 10ஆம் பாடலின்
53ஆம் அடியிலும் இந்தக் கருத்தில் பயில்கின்றது. இதனால் அக் காலத்தில் கடல்/ நீர்ப்
போக்குவரத்துக்கு மரக்கலத்தில் பாயைக் கட்டிக்
காற்றின் இயக்க ஆற்றலைப் பயன்படுத்தியதைத் தெளியலாம்.
அடுத்து, அகநானூற்றில் பா140/11,133/7,
394/3 ஆகிய அடிகளில் கொல்லை [விளைநிலம்}
என்னும் கருத்தில் ஆளப்பட்டுள்ளது. சான்று:
இதை முயல் புனவன் புகை நிழல்
கடுக்கும் – அகநா. 140/11.
இங்ஙனம் சங்கச் சொல் வளத்தைத் தெளிந்து, பாவின் கருத்தை உணரலாம்.
மேலும் அகராதி ஆக்கத்திற்கும் வாய்ப்பாகின்ரது.
நன்றி:
இணையத் தரவுகள் *********
Comments
Post a Comment